செய்திகள் :

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

post image

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங்கின் அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், பஞ்சாப் கேப்டனான ஸ்ரேயாஸ் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அந்த வகையில் மூன்று அணிகளை வழிநடத்திய 5-வது கேப்டன் என்ற சாதனையையும், 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

முதல் முறையாக தில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் சென்னை அணியை வீழ்த்தினார். அதன்பின்னர் இந்தாண்டு பஞ்சாப் அணி சார்பில் குஜராத் அணியை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று வெவ்வேறு அணிகளுக்கு மூன்று போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி வெவ்வேறு அணிகளுக்கு அரைசதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

அவருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புணே, ராஜஸ்தான் அணிகளுக்காக முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், புணே வாரியர்ஸ் அணிக்காக போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்!

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம்... மேலும் பார்க்க

தோல்வியிலும் நற்செய்தி: சிஎஸ்கேவுக்காக தோனி புதிய சாதனை!

சேப்பாக்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், தோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த ... மேலும் பார்க்க

தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்த... மேலும் பார்க்க

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்... மேலும் பார்க்க

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ ச... மேலும் பார்க்க