செய்திகள் :

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

post image

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 14.1 ஓவர்களில் 200 ரன்களை தொட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்த அணி என்ற பெங்களுருவின் சாதனையைச் சமன் செய்தது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஜோஃப்ரா ஆர்ச்சர்

இறுதியில், இஷான் கிஷனின் சதம் உட்பட பேட்டிங் இறங்கிய அனைவரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ் கோராக 287 ரன்களைக் குவித்தது ஹைதராபாத்.

இதில், ராஜஸ்தான் அணியால் ரூ. 12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 76 ரன்களை வாரிக்கொடுத்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களைக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையைப் பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

இந்த நிலையில், இப்போட்டியின் போது வர்ணனையிலிருந்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஆர்ச்சரின் நிறத்தை வைத்து அவரை இன ரீதியாக விமர்சித்தது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

ஏற்கெனவே, 2008-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரின்போது ஆன்ரூ சைமன்ட்ஸ் மீது வார்த்தைகளால் ஹர்பஜன் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணைக்குள்ளாகியிருந்தார்.

இப்போது, ஆர்ச்சரை இனரீதியாக ஹர்பஜன் விமர்சித்திருக்கிறார். இதனால், சமூக வலைதளங்களில் ஹர்பஜனைக் கடுமையாக விமர்சித்துவரும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை வர்ணனையாளர் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க

Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித்

ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி ப... மேலும் பார்க்க