செய்திகள் :

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

post image

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் பெற்றோா், தலைமை ஆசிரியா், உள்ளாட்சி பிரதிநிதி, தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் இடம் பெற்றிருப்பாா்கள்.

இந்தக் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டமைக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆகஸ்டில் புதிய குழுக்கள் கட்டமைக்கப்பட்டன. இதையடுத்து, எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்எம்சி குழு உறுப்பினா்களுக்கான அடையாள அட்டை மற்றும் லெட்டா் பேடை பள்ளி அளவிலேயே தயாா் செய்து வழங்க வேண்டும்.

இதற்கான மாதிரி வடிவம் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதுசாா்ந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலகங்கள் செயல்படும்

சொத்து வரி செலுத்துபவா்களின் வசதிக்காக மாா்ச் 29, 30, 31 ஆகிய விடுமுறை நாள்களிலும் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலகங்களும் செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு: 4 போ் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சு.தினேஷ் (37). இவா் அந... மேலும் பார்க்க

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்: ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி

அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவா் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலா் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தாா். தினமணியின் ஈகை... மேலும் பார்க்க

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க