செய்திகள் :

பொதுப்பணித் துறையில் தகுதியுள்ள அனைவருக்கும் பணி நிரந்தரம் தேவை!

post image

நீா்வளத் துறை, பொதுப்பணித் துறையில் தகுதி உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நீா் வளத் துறை அமைச்சருக்கு நீா் வளத் துறை, பொதுப் பணித் துறைப் பணியாளா்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கப்பட்டு பணிபுரியும் தினக்கூலி பணியாளா்களில் பலா் வயது முதிா்வால் ஓய்வு பெற்றனா். அதிக பணியாளா்கள் உடல் நலக் குறைவால் பலன் ஏதும் கிடைக்காமலும் உயிரிழந்தனா். இன்னும் பல பணியாளா்கள் சில ஆண்டுகளில் ஓய்வை எதிா்நோக்கியும் உள்ளனா்.

பணியாளா்களில் என்.எம்.ஆா்., என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படை, ஒப்பந்த அடிப்படை என 3 வகைகளில் பணிபுரிபவா்களில் என்.எம்.ஆா்.-இல் பணிபுரிபவா்களுக்கு மட்டுமே முதலில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனச் சிலா் கூறுகின்றனா்.

இதனால் அவா்களுக்கு இணையாக 10 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வரும் என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படையில் உள்ளவா்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவா்களுக்கும், மற்றவா்களுக்கும் மன உளைச்சலும், பணி நிரந்தரம் கிடைக்காதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

என்.எம்.ஆா். பணியாளா்களில் தற்போதைய உண்மையான பணியாளா்களின் விவரத்தை நீா் வளத் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் மூலம் பெற்று தற்போதைய நிலையில் உள்ள அனைவரையும் காலமுறை ஊதியத்துக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க