செய்திகள் :

நம்ப முடியாத சாதனையைச் செய்த எம்புரான்!

post image

மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் ஆச்சரியப்படுத்தும் சாதனையைச் செய்துள்ளது.

பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.

லூசிஃபர் படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையால், எம்புரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்) தயாரிப்பாளர்களான ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இப்படத்தின் படப்பிடிப்புக்காக அதிக செலவு செய்துள்ளனர்.

இப்படம் நாளை ( மார்ச் 27) வெளியாகவுள்ளதால் கேரளத்தில் பல திரையரங்குகளில் டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விற்றுத்தீர்ந்துள்ளன.

இந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எம்புரான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாக மட்டுமே உலகளவில் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இது, இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவுக்கும் நடக்காத வணிகம் என்கின்றனர்.

ஒரு மலையாளப் படத்திற்கு எப்படி இவ்வளவு பெரிய வரவேற்பு சாத்தியம் என பலமொழி திரைத்துறை நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

மேலும், எம்புரான் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்து விடும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை படம் மீண்டும் பார்க்கும்படி இருந்தால் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளைச் செய்து அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் அடையும்.

இதையும் படிக்க: டூரிஸ்ட் பேமிலி வெளியீட்டுத் தேதி!

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க