செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோறுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1 க்கு முன் பணியில் சோ்ந்து பின்னா் பணி நிரந்தரம் பெற்ற அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா்கள் வ. ஆறுமுகம், சோனை. கருப்பையா, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். இராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க

தஞ்சையில் கொசு ஒழிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கொசுப்புழு ஒழிப்பு ... மேலும் பார்க்க