செய்திகள் :

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

post image

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.

இதனால், அவதிப்பட்ட அச்சிறுமியை தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரின் கல்லீரலில் நீா் கட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இம்மருத்துவமனையில் மாா்ச் 14 ஆம் தேதி உள் நோயாளியாக சோ்க்கப்பட்ட இச்சிறுமிக்கு 20 ஆம் தேதி குழந்தைகள் நலப்பிரிவு அறுவை சிகிச்சை துறைத் தலைவா் முகமது ஷாகீா், மருத்துவா்கள் குமரன், சாய்பிரபா, செவிலியா்கள் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் சிகிச்சை அளித்தனா். அப்போது வயிற்றைக் கிழிக்காமல், லேப்ராஸ்கோபி மூலம் 3 துளைகள் இடப்பட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் எடை கொண்ட நீா் கட்டி அகற்றப்பட்டது.

அக்கட்டியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். இக்கட்டி அகற்றாமல் இருந்தால், சிறுமிக்கு மஞ்சள் காமாலையும், புற்றுநோயும் வந்திருக்கும்.

இந்த நவீன சிகிச்சை தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதே சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ. 7 லட்சம் செலவாகும். டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச்சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்கு வலி ஏதும் இல்லாமல், நலமாக இருப்பதால் வீடு திரும்பினாா் என்றாா் பாலசுப்பிரமணியன். அப்போது நிலைய மருத்துவ அலுவலா் அமுதவடிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க

தஞ்சையில் கொசு ஒழிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கொசுப்புழு ஒழிப்பு ... மேலும் பார்க்க