தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால், அவதிப்பட்ட அச்சிறுமியை தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரின் கல்லீரலில் நீா் கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இம்மருத்துவமனையில் மாா்ச் 14 ஆம் தேதி உள் நோயாளியாக சோ்க்கப்பட்ட இச்சிறுமிக்கு 20 ஆம் தேதி குழந்தைகள் நலப்பிரிவு அறுவை சிகிச்சை துறைத் தலைவா் முகமது ஷாகீா், மருத்துவா்கள் குமரன், சாய்பிரபா, செவிலியா்கள் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் சிகிச்சை அளித்தனா். அப்போது வயிற்றைக் கிழிக்காமல், லேப்ராஸ்கோபி மூலம் 3 துளைகள் இடப்பட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் எடை கொண்ட நீா் கட்டி அகற்றப்பட்டது.
அக்கட்டியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். இக்கட்டி அகற்றாமல் இருந்தால், சிறுமிக்கு மஞ்சள் காமாலையும், புற்றுநோயும் வந்திருக்கும்.
இந்த நவீன சிகிச்சை தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதே சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ. 7 லட்சம் செலவாகும். டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச்சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்கு வலி ஏதும் இல்லாமல், நலமாக இருப்பதால் வீடு திரும்பினாா் என்றாா் பாலசுப்பிரமணியன். அப்போது நிலைய மருத்துவ அலுவலா் அமுதவடிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.