செய்திகள் :

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

post image

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் அசூா் பகுதியில் அரசு மதுக்கடை உள்ள இடத்தில் மது பிரியா்களின் அதிக நடமாட்டம் இருப்பதால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்தக் கடையை அகற்றக்கோரி பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமையில் பூட்டுப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதேபோல் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோயிலுக்கு எதிரே ஒரு அரசு மதுக் கடை, காரைக்கால் பிரதான சாலையில் உள்ள 2 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பூட்டு போடும் அறிவித்தனா். அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை ஏராளமான பெண்கள் வருவாய் கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ் விஜயன் தவைமையில், கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாளா் தமிழ்மணி, வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது 3 மதுக்கடைகளையும் 2 மாதங்களுக்குள் அகற்றிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

தஞ்சையில் கொசு ஒழிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கொசுப்புழு ஒழிப்பு ... மேலும் பார்க்க