செய்திகள் :

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

post image

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர்.

சேலம் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோியிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

முன்னதாக சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து எல்லப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. திருக்கோவிலை வந்து அடைந்தவுடன் பூசாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜை செய்தார். மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்

தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சியைக் காண அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை காலை பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், அலகு குத்துதல் தொடர்ந்து சக்தி பூ கரகத்துடன் அம்மன் ஊர்வலம் 27ல் திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சியும் 28-ந் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சனிக்கிழமை இரவு சதாபரண நிகழ்ச்சியுடன் அம்மன் திருவிழா நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க