செய்திகள் :

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்ற முறையீடு!

post image

திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதன்கிழமை முறையிட்டுள்ளனர்.

திருநெல்வேலி நகரம் தொட்டி பாலத்தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி (60). காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப் பிரிவில் பணியாற்றியவா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சாமியா தைக்கா பள்ளி வாசலில் ரமலான் நோன்பு தொழுகையை முடித்த பின் வீட்டிற்கு நடந்து சென்ற அவரை, இருசக்கரவாகனத்தில் வந்த மா்மநபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இந்த வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முகமது தெளஃபிக் என்பவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஜாகீா் உசேனின் மகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்க : ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு!

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவர... மேலும் பார்க்க

பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை செல்வோரைத் திரட்டி... மேலும் பார்க்க