செய்திகள் :

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

post image

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வரும் நீலகிரி மலையில் மேற்கொள்ளப்படும் மலை காய்கறி சாகுபடிக்கு அளவுக்கு அதிகமாக ரசாயன உரம், மருந்தைப் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வருகின்றனர்.

ரசாயன பயன்பாட்டைக் குறைத்து இயற்கை வேளாண்மை பரப்பளவை அதிகரிக்கும் விதமாக நீலகிரியை ஆர்கானிக் மாவட்டமாக அறிவித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

கூட்டு வேளாண்மை தோட்டம்

இதன் ஒரு பகுதியாகப் பழங்குடி கிராமங்களில் ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டங்களை அந்த மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை உருவாக்கி வருகிறது.

அரசு மூலம் விதைகள், வேளாண் இடுபொருட்கள், நிழல் வலைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கிராமத்திலிருக்கும் பொது இடத்தைத் தேர்வு செய்து தோட்டமாக மாற்றிப் பயிர் செய்யலாம். சாகுபடி செய்யப்படும் பயிர்களை மக்களே அறுவடை செய்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.

ஆர்கானிக் முறையில் பழங்குடி மக்கள் கூட்டாக உற்பத்தி செய்த முள்ளங்கி, ப்ரோக்கோலி, கத்தரிக்காய் மற்றும் கீரைகளை அறுவடை செய்து பகிர்ந்ததை விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கூட்டு வேளாண்மை தோட்டம்

இது குறித்துத் தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "பழங்குடிப் பெண்களிடம் அண்மைக் காலமாக ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. இதனைப் போக்கும் விதமாகவும் மீண்டும் இயற்கை வேளாண்மையை நோக்கி இந்த மக்கள் திரும்ப வேண்டும் எனவும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனைப் பள்ளம் கிராமத்திலிருந்த தரிசு நிலத்தைச் சுத்தம் செய்து, கூட்டு வேளாண்மைத் தோட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பல்வேறு காய்கறிகளை ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து உட்கொண்டு வருகின்றனர். கிராம ஒற்றுமை, தற்சார்பு, சமச்சீர் ஊட்டச்சத்து போன்ற பல பலன்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து திண்டுக்கல்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர். 96885 25605 நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர். மதுகண்ணன்,சிவகங்கை. 96550 16306 கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெ... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந... மேலும் பார்க்க

Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும்... மேலும் பார்க்க

LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் செல்வம்!

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!MRK பன்னீர் செல்வம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சு... மேலும் பார்க்க