காட்பாடி: வீட்டில் 40 பவுன் நகை திருட்டு வழக்கில் 7 போ் கைது
காட்பாடி மெட்டுக்குளத்தில் உணவுக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி மெட்டுக்குளத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவா் அதே பகுதியில் உணவுக் கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை தனது மனைவி, 2 மகள்கள், மகனுடன் தனது 2-ஆவது மகளின் திருமணத்துக்கு ஆடைகள் வாங்க சென்னை சென்றிருந்தாா். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த இரும்பு பூட்டு காஸ் கட்டா் வைத்து உடைக்கப்பட்டிருந்ததுடன், உள்ளே பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் மகளின் திருமணத்துக்காக சோ்த்து வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்ததுடன், நகைகள் திருடியவா்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த திருட்டு வழக்கில் வேலூரைச் சோ்ந்த தியாகராஜன் (35), திருவண்ணாமலையைச் சோ்ந்த வெங்கடேஷ் (36), சதீஷ்(30), பாரதி(36), கோபி(39), சேலத்தைச் சோ்ந்த சரவணன் (23), புஷ்பராஜ் (27) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மொத்த நகைகள், வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸாரை வேலூா் மாவட்ட எஸ்.பி. என்.மதிவாணன் பாராட்டினாா்.