செய்திகள் :

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' - வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

post image

வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், எந்த நாடு அமெரிக்காவின் மீது அதிக வரி விதிக்கிறதோ, அந்த நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க பொருள்களின் மீது இந்தியாவும் அதிக வரிகளை விதித்து வருகிறது. ஆக, இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியாகி உள்ள அறிக்கையினால், இந்தியாவிற்கு இன்னமும் வரி சுமை கூறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Trump | ட்ரம்ப்
Trump | ட்ரம்ப்

சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!

அந்த அறிக்கையில், அமெரிக்காவில் அதிகம் புழங்கும் ஃபென்டனில் என்ற போதை பொருள் சப்ளையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தரவுகளின் படி, கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னாளான 12 மாதங்களில், இந்தப் போதை மருந்தால் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதன்முறையாக...

போதை மருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கு சீனா காரணம் என்று அந்த நாட்டின் மீது கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கும் உத்தரவில் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டிருந்தார் ட்ரம்ப்.

Trump
Trump - ட்ரம்ப்

இப்போது, ஃபென்டனில் போதை மருந்து கடத்தலில் முதன்முதலாக இந்தியாவின் பெயரை உச்சரித்துள்ளது அமெரிக்கா‌.

ட்ரம்ப் கூறிய பரஸ்பர வரி இன்னும் ஒரு சில நாள்களில் வரவிருக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போது அமெரிக்க வரி அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க