செய்திகள் :

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும் வலி உயிரே போகிறது. பிறகு மெள்ள மெள்ள வலி குறைகிறது. திடீரென இப்படிப்பட்ட வலி ஏற்பட என்ன காரணம், இந்த வலி சில நாள்களில் சரியாகிவிடுமா, தொடருமா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது  பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தெரிகிறது. 

பிளான்ட்டர் ஃபாஸியா (Plantar Fascia) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும்  தடிமனான ஒரு  திசு. இந்தத் திசுவானது குதிகால் எலும்பை கால்விரல்களுடன் இணைக்கிறது. பாதத்தின் வளைவுக்கு உறுதியையும் வழங்குகிறது. கால்களின் வடிவத்தைப் பராமரிக்கவும், வாக்கிங், ஜாகிங் மேற்கொள்ளும்போது அந்த இயக்கத்தை எளிதாக்கவும் வில்லின் நாண் போல ஊக்கசக்தியாக பிளான்ட்டர் ஃபாசியா செயல்படுகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்படும்போது கால்களில் வலி உண்டாகும். அதையே பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்கிறோம்.

உடல் பருமன்தான் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அது தவிர,  செருப்போ, ஷூவோ நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும்.

பிளான்ட்டர் ஃபாசிடிஸ் பாதிப்பின் விநோத தன்மையே, காலையில் எழுந்து முதல் அடி வைக்கும்போது கடுமையாக வலிப்பதுதான். அதாவது நீண்ட ஓய்வுக்குப் பிறகு எடுத்து வைக்கும் முதல் அடியில் தீவிர வலியை உணர முடியும்.

இந்த அதிகாலை வலியானது பெரும்பாலும் குதிகாலில்  கூர்மையான  ஒரு  பொருளால் குத்துவது போன்ற உணர்வை உண்டாக்கும். அமர்ந்திருத்தல், உறங்குதல் போன்ற செயலற்ற காலங்களில்  பிளான்ட்டர் ஃபாசியா தசைகள் இறுக்கமடைந்து, சுருங்குவதால் இந்த வலி உண்டாகிறது. திடீரென காலில் எடை விழும்போதும் வலி, இறுக்கம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும்.

பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார்.

மருத்துவரை அணுகினால், உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் அறிந்து சிகிச்சை அளிப்பார். பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார்.

பிளான்ட்டர் ஃபாசியாவில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான கால் சீரமைப்பை ஊக்கப்படுத்தவும் போதுமான ஆதரவு கொண்ட காலணிகளைத் தேடுங்கள். ஷாக் அப்சார்பர் (Shock absorber) போல அதிர்ச்சியை உறிஞ்சி, குதிகால் அழுத்தத்தைக் குறைக்க குதிகால் மற்றும் முன்கால் பகுதிகளில் போதுமான குஷனிங் கொண்ட காலணிகள் பலன் தரும். சாதாரண காலணிகளை அணிந்தால் பாத வலி இன்னும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். இது நிச்சயம் குணப்படுத்தக் கூடியதே. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நேர்மைக்கு பரிசு டிரான்ஸ்பர்' மாற்றப்பட்ட சிவகாசி `நகர் நல அலுவலர்' - பின்னணி என்ன?

சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலரை மாநகராட்சி நிர்வாகத்துறை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியில் சிவகாசி மேயரின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க