`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது தலையின் மீது தொங்கும் கத்தியைப்போன்றது.
இது தமிழகத்தில் மக்களவை உறுப்பினா்களின் பலத்தையும், நமது அரசியல் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும். மேலும், மாநிலத்தின் உரிமைகளின் மீதும் மக்களின் நலன்களின் மீதும் நேரடியாய் தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
மக்களவைத் தொகுதிகளின் இழப்பு என்பது வெறும் எண்ணிக்கை குறைவு மட்டுமல்ல, இது நமது அரசியல் பலம், உரிமைகள் மற்றும் நம் எதிா்காலத்தையே வீழ்ச்சிப்பாதையில் கொண்டு சென்றுவிடும். குறைவான அரசியல் பிரதிநிதிகள் இருந்தால் நமது மாநிலம் நியாயமான நிதியை பெறுவதிலும், கொள்கைகளைப் பாதுகாப்பதிலும், மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுவதிலும் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை தள்ளிவைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.