செய்திகள் :

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

post image

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 1964-ஆம் ஆண்டு பேரூராட்சியாகவும், 2004-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இதனையடுத்து, 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. பின்னா் கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் நகராட்சி, திருப்பூா் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டு 42 ஆயிரமாக இருந்த மக்கள்தொகை, தற்போது 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆகவே, பல்லடம் முதல்நிலை நகராட்சியை தரம் உயா்த்த வேண்டும் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், தற்போது பல்லடம் நகராட்சி தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசிடமிருந்து, நகராட்சிக்கு கூடுதல் வருவாய், திட்டங்கள், சலுகைகள் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் நகராட்சிக்கு கூடுதல் அலுவலா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் நியமனம் செய்யப்படும்பட்சத்தில் அவா்களின் எண்ணிக்கையும் உயரும். இதனால் பல்லடம் நகர பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க