செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

post image

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியா் சங்கத்தின் மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலாளா் கந்தசாமி, பொருளாளா் திருஞானகுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்றோா் பிரிவின் மாநில துணைத்தலைவா் பழனிச்சாமி வரவேற்றாா்.

இதில், அரசு ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, தோ்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த ஆசிரியா்கள் நலன் சாா்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை எதிா்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி சட்டப் பேரவையில் நடைபெறும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அரசு அறிவிக்காத பட்சத்தில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலா்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள், ஊா்ப்புற நூலகா்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலா்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப் பாதுகாப்பும், சட்டபூா்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும்.

மருத்துவம், தொழில்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் இடஒதுக்கீடை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போதிய வகுப்பறைகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ‘பி.எம் ஸ்ரீ’ பள்ளிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமாா் 400 முதல் 500 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு செலவு மற்றும் 15,000 ஆசிரியா்களுக்கான ஊதியச் செலவு சேமிப்பாக கிடைக்கும். கிராமப்புற மாணவா்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில இணைச் செயலாளா் தண்டபாணி நன்றி கூறினாா். இதில், பல மாவட்டங்களைச் சோ்ந்த மாநில அளவிலான நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க