செய்திகள் :

மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு; 2 பேர் கைது

post image

மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் கைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இதில் கட்டடத்தின் உள் பகுதி சேதமடைந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அதிகாலை 4 மணியளவில் தலவாடா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், பீட் காவல் கண்காணிப்பாளர் நவ்னீத் கன்வத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

செவிலியர்கள் அலட்சியம்! பிறந்த குழந்தை பலி!

பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் அறிவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நபர் ஒருவர் மசூதியின் பின்புறம் இருந்து உள்ளே நுழைந்து அங்கு சில ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது வெடிப்பை ஏற்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்தி... மேலும் பார்க்க