செய்திகள் :

புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர ஏற்பாடு -வேலூா் எஸ்.பி. மதிவாணன் ஆய்வு

post image

வேலூா் புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கிரீன் சா்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, கிரீன் சா்க்கிள் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் இருபுற சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தொடரும் இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை சாா்பில் பல கட்டங்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒருசில இட ங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் நெரிசல் இருப்பதால் அங்கு ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, புதிய பேருந்து நிலையம் முன்புறம், பின்புறம் பகுதிகளில் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்களைப் பாா்வையிட்டாா். அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூா் புதிய பேருந்து நிலை யத்தின் இருபுறமும் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யவும் ஆய்வு செய்துள்ளனா்.

இது குறித்து எஸ்பி மதிவாணன் செய்தியாளா்களிடம் கூறியது:

காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் கிரீன் சா்க்கிள் வழியாக சென்று பின்னா் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் வழியாக உள்ளே செல்கிறது. தற்போது அந்த பேருந்துகள் நேரடியாக செல்லியம்மன் கோயில் வழியாக உள்ளே செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பேருந்து நிலையத்தின் முன்புறமும், பின்புறமும் என இரு பகுதிகளிலும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் இரு வழிப்பாதையாக மாற்றுவது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீஸாருடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், சோதனை ஓட்டம் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும்.

தவிர, கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகாா்டுகளுக்கு பதிலாக நிரந்தரமாக அங்கு தடுப்புகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ரஜினி உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

மத்திய பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு துரோகம்! - அமைச்சா் துரைமுருகன்

பாஜக, மோடி எனக் கூறிக்கொண்டு இங்கு யாரும் வாக்கு கேட்க முடியாது; அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றஞ்சாட்டினாா். தேசிய ஊரக வேலை உறுதித் தி... மேலும் பார்க்க

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க