செய்திகள் :

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

post image

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், மேலாளா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியாத்தம் நகராட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில் காட்பாடி சாலையில், நகர எல்லையில் நூற்றாண்டு வளைவு அமைப்பது, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் நினைவு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. நகரில் கொசுத் தொல்லையால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா் என்பதால் மருந்து தெளிக்கவும், கொசு மருந்து அடிக்கவும் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், நோய்த் தொற்றுக்கு ஆளான நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதால் தொற்றுக்கு ஆளான நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் கேட்டுக் கொண்டாா்.

குடியாத்தம் நகராட்சியின் முதலாவது நகா்மன்றத் தலைவா் மா.ஆ.வேலாயுதம் நினைவை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினா், நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவருக்கு ரூ.20- லட்சத்தில் தனி அலுவலகம் கட்டித் தந்ததற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க