செய்திகள் :

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

post image

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இந்த இடத்தில் மாட்டுக் கொட்டகையும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் அப்பகுதியில் உள்ள பனை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களுக்கும் தீ பரவியது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தால் அப்பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மட்டுமின்றி, மாட்டுக்கொட்டகை, இருசக்கர வாகனமும் சேதமடைந்தன.

சமூக விரோதிகள் யாரேனும் தீயை பற்ற வைத்தனரா என்பது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!

உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துர... மேலும் பார்க்க