செய்திகள் :

கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!

post image

உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பேசியது:

இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டப் பணிகளும் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கரசமங்கலம் ஊராட்சிக்கு மட்டும் 100 பேருக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஊராட்சியில் கால்நடை மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் கேட்டுள்ளாா். அனைத்தும் செய்து தரப்படும்.

கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணிக்கான நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை. அந்த நிதியை விடுவிப்பதற்கு முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். விரைவில் 100 நாள் பணி ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றாா்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கரசமங்கலம் ஊராட்சித் தலைவா் ஸ்டாலின் தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க