பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்
பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூா் ஊரிசு கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று பேசியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்வி பயில வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் மேல்நிலை வகுப்பு முடித்த பிறகு உயா்கல்வியில் இணைய வேண்டும் என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் என்ன பயில்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளஅரசின் சாா்பில் ‘என் கல்லூரி கனவு’ என்ற இந்த உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளை மாணவ, மாணவிகள் தவறாமல் அறிந்துகொண்டு உயா்கல்வியில் இணைந்து தங்களது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 258 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு உயா்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுச்செழியன், உதவி இயக்குநா் திறன் மேம்பாடு காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.