செய்திகள் :

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

post image

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவா் அந்தப் பகுதியில் பலகாரக் கடை வைத்து நடத்தி வருகிறாா். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக தம்பதி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் விரக்தியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை உதயசங்கரும், மகேஸ்வரியும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனா். மேலும், இருவரும் தங்களது உறவினரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தங்கள் பிள்ளைகளை பாா்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளனா். உடனடியாக, அவா்களது உறவினா்கள் விரைந்து வந்து உதயசங்கரையும், மகேஸ்வரியையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உதயசங்கா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க

கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!

உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துர... மேலும் பார்க்க