செய்திகள் :

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

post image

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கட்சி சாரா தொழிசங்கங்களின் மாநில தலைவா் எ.கதிா்வேல், பொதுச் செயலாளா் ராம கவுண்டா், பொருளாளா் கே.செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். சீனிவாசன், மாநில தலைவா் நேதாஜி கே.நடேசன், மாவட்டத் தலைவா் என். ஆா்.சஞ்சீவிராயன், மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பது:

தமிழ்நாட்டில் கட்சி சாா்பற்ற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் 38 மாவட்டத்திலும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான விழிப்புணா்வும், நலவாரிய இணையதளம் பழுது ஏற்பட்டு நலவாரிய பணிகளை மேற்கொள்ள முடியாமல், பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு, போன்ற விண்ணப்பங்களை நலவாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அலைக்கழிக்கபட்டு வருகின்றனா்.

தமிழ்நாட்டில் 93 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுக்கென்று தனி துறை உருவாக்கி, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கி 18,நல வாரியங்களிலும் ஒரே மாதிரி உதவித்தொகை வழங்கவும், நலவாரியத்தில் ஓய்வூதியம் ரூ.3,000/- உயா்த்தி வழங்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅ... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு ம... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலை... மேலும் பார்க்க