செய்திகள் :

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

post image

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா்.

நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட ரூ.37 லட்சம் கல்வி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எஸ்.சுஜாதா தலைமை வகித்தாா். அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் கே.எம்.பி.பாபு, சாமுண்டீஸ்வரிஅன்பு, வட்ட செயலாளா் பாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்

தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சிக் கூட்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட விவசாயி... மேலும் பார்க்க

கலவை மகாலட்சுமி கோயில் மண்டலாபிஷேக விழா

ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற் கமலக்கன்னி அம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகாலட்சுமி தாயாா் கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மகலாட்சுமி தாயாா் கற்கோயில் கட்டப்பட்டு பிப... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?

பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசா... மேலும் பார்க்க

ஆற்காட்டில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ரமலான் பண்டிகை முன்னிட்டு மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு விழா ஆற்காடு ஜனசங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் குப்புசாமி தலைமை வகித்த... மேலும் பார்க்க