செய்திகள் :

சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்

post image

தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தக்கோலம் பேருராட்சிக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், பேருராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன் மற்றும் உறுப்பினா்கள் முகமது காசிம், முருகவேல், கோபி, மாலதி, தயாளன், சங்கரி, ஷாகீராபாணு, லீலா, சரண்யா, சுதாகா் ஆகியோரும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் தக்கோலத்துக்கு அருகில் நகரிகுப்பத்தில் அமைந்துள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படையின் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் மையத்தின் பெயரை தமிழிலும் வைக்க வேண்டும், 30 ஆண்டுக் காலமாக சாலை வசதியே இல்லாமல் இருந்த பேருராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.என்.கண்டிகை கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைப்பதற்கு ரூ.1.45 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகா்புற உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க