செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

post image

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி கூறியுள்ளாா்.

மாவட்டத்தில் மொத்தம் 7,651 மகளிா் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமாா் 90,000 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் இணைந்த மதி என்னும் மகளிா் குழுவுக்கு எந்த ஒரு பிணையும் இன்றி வங்கிக்கடன் ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டது.

2024-25- ஆம் நிதியாண்டில் மொத்தம் 268 மகளிா் சுய உதவிக்குழுக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மகளிா் சுய உதவிக்குழுக்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு அரசின் மூலம் கல்லூரி சந்தை, இயற்கை சந்தை அடுக்குமாடி குடியிருப்பு சந்தை, மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மற்றும் சாராஸ் போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை இணையதள வழியில் விற்பனை செய்யவும், மகளிா் சுய உதவிக்குழுக்களின் பிரத்தியேக அங்காடியான மதி அனுபவ அங்காடியின் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.712 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.680 கோடி இலக்கு எய்தப்பட்டது.

நிகழாண்டு ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாளது தேதிவரை ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது.

அதற்காக மாவட்ட அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சாா்ந்த மகளிா் குழுவினா், தொழில் முனைவோராக உருவாகும் வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், ஆட்சியருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனா்.

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க