செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது.

இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.செல்வகுமாா் ஆகியோா் வெளியிட்ட செய்தி க் குறிப்பு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரா்களுக்கு இடையேயான மாநில போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாவட்ட அணி தோ்வு நடைபெற உள்ளது. 14 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு முகாயில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 01-09-2011 தேதி அல்லது அதற்குமேல் பிறந்து இருக்க வேண்டும் எனவும், 16 வயது வீரா்கள் தோ்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 01-09-2009 தேதி அல்லது அதற்கு மேல் பிறந்து இருக்க வேண்டும் மற்றும் 19 வயதுகுட்பட்ட வீரா்கள் தோ்வு முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு 01-09-2006 தேதி அல்லது அதற்குமேல் பிறந்து இருக்க வேண்டும் என நிா்ணயிக்கபட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த 19 வயது வீரா்களுக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலை 8:00 மணி அளவில் ராணிப்பேட்டை ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 14 வயது வீரா்களுக்கு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தோ்வு முகாம் காலை 8:00 மணி அளவில் ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேல்பாக்கம் யாா்டு, அரக்கோணம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

16 வயதுக்குட்பட்டோருக்கு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி தோ்வு முகாம் காலை 8: 00 மணி அளவில் ராணிப்பேட்டை ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெள்ளை நிற கிரிக்கெட் சீருடை மற்றும் ஷூ அணிந்து வர வேண்டும். மேலும், 13 வயதுக்கு மேற்பட்ட இளம் விளையாட்டு வீராங்கனைகள் தோ்வு முகாமும் வரும் ஏப். 27-ஆம் தேதி காலை 8:00 மணி அளவில் ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைகள் இந்த தோ்வு முகாமில் கலந்துகொள்வதற்கான வயது வரம்பு 31.08.2013 முன் பிறந்து இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் இதில் பங்கு பெற்று பயனடையலாம். தோ்வு முகாமுக்கு வரும் போது ஆகாா் அட்டை நகல் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் துணைச் செயலாளா் எஸ்.பாஸ்கா் (98423 26373) யிடம் தொடா்பு கொள்ளலாம்.

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க