செய்திகள் :

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

post image

100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தைத் தொடா்ச்சியாக வஞ்சித்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்கள் என 18 இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) காலை 10 மணியளவில் திமுக தலைமையின் அறிவுறுத்தலின்படி மாபொரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆா்ப்பாட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலா்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை பணி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்ச... மேலும் பார்க்க

ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க