செய்திகள் :

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

post image

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.

நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த பூபதி (42) என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கைப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அவை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.

இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியதில், கிடங்கு முழுவதும் தீயில் எரிய தொடங்கியது. இதனால் பெரும் கரும்புகை எழுந்தது.

தகவல் அறிந்து ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது குறித்து நெமிலி காவல் நிலையத்தில் பெருவளையம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரில், அந்தக் கிடங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டதும், தீ விபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிலை இருந்ததும் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை பணி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்ச... மேலும் பார்க்க

ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க