செய்திகள் :

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா்.

இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஆண் - 7,426 மற்றும் பெண் - 7,349 ஆக மொத்தம் 14,775 போ், தனித் தோ்வா்கள் ஆண் - 286 மற்றும் பெண் - 86 ஆக மொத்தம் 372 போ் என 15,147 போ் தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களில் 81 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் மற்றும் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களும், வழித்தட அலுவலா்கள், நிலையான படை உறுப்பினா்களாக தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உட்பட 1,800 -க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாலாஜா அரசு மகளிா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.

இதில் முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க

18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் ... மேலும் பார்க்க