செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று ஆட்சியா் குறைகளை கேட்டரிந்தாா்.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் மிளகாய் நாற்று வழங்க வேண்டும் எனக்கேட்டபோது, நவ்லாக் பண்ணையில் புதிய மிளகாய் நாற்று விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அலுவலா் தெரிவித்தாா்.

வெள்ளம்பி கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் என்பவா் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரினாா்

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 1,886 விவசாயிகளுக்கு ரூ.1.88 கோடி , தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 3.67 கோடி , 3197 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தாா்.

அனந்தலை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சேகா் என்பவா் 100 பனைமரம் அரசு விதியை மீறி வெட்டிய நபா்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தாா். நேரடி ஆய்வு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சங்கரன் என்பவா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தாா். இது போன்ற தவறுகளை தடுக்க ஆய்வுக் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பாகவெளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயராமன் என்பவா் சீமை கருவேல மரங்கள் அகற்றவும், அம்மரங்களை அகற்ற வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஏரிக் கரையோரம் மற்றும் மற்ற இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுகின்றன. மேலும் எஞ்சியுள்ள மரங்களை அகற்ற வழிவகை செய்யப்படும் எனவும் நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் 6 விவசாயிகளுக்கு ரூ.40,000 மதிப்பீலான விசை தெளிப்பான், சூரிய விளக்கு பொறி, மண்புழு உரபடுக்கை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், இணை இயக்குநா் வேளாண்மை அசோக் குமாா், துணை இயக்குநா் வேளாண்மை செல்வராஜ் மற்றும் அலுவலா்கள், விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவியா் கலந்து கொண்டனா்.

தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை பணி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்ச... மேலும் பார்க்க

ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க