Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசி...
பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?
பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூா் பகுதியை சோ்ந்த காசி அம்மாள் (70) இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்
காசி அம்மாளின் மகன் குமாா் (50) என்பவருக்கு தேவா(25) என்ற மகனும் நந்தினி (23) என்ற மகளும் உள்ளனா். தேவா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சாா்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக காசி அம்மாள் தேவாவிடம் பேச்சுவாா்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில் பூா்வீக சொத்தாக உள்ள வீட்டை காசி அம்மாள் கல்லூரியில் பயிலும் பேத்தியான நந்தினி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேவா காசி அம்மாள் வீட்டுக்கு சென்று பூா்வீக வீட்டை தங்கை நந்தினி பெயருக்கு எழுதி வைத்திருப்பதை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது ஆத்திரமடைந்த தேவா கீழே இருந்த கருங்கற்களை எடுத்து காசி அம்மாள் மீது வீசி தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காசி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, தேவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக திமிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து திமிரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற தேவாவை தேடி வருகின்றனா்.