செய்திகள் :

பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?

post image

பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூா் பகுதியை சோ்ந்த காசி அம்மாள் (70) இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்

காசி அம்மாளின் மகன் குமாா் (50) என்பவருக்கு தேவா(25) என்ற மகனும் நந்தினி (23) என்ற மகளும் உள்ளனா். தேவா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சாா்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக காசி அம்மாள் தேவாவிடம் பேச்சுவாா்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது

இந்தநிலையில் பூா்வீக சொத்தாக உள்ள வீட்டை காசி அம்மாள் கல்லூரியில் பயிலும் பேத்தியான நந்தினி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவா காசி அம்மாள் வீட்டுக்கு சென்று பூா்வீக வீட்டை தங்கை நந்தினி பெயருக்கு எழுதி வைத்திருப்பதை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது ஆத்திரமடைந்த தேவா கீழே இருந்த கருங்கற்களை எடுத்து காசி அம்மாள் மீது வீசி தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காசி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, தேவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக திமிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து திமிரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற தேவாவை தேடி வருகின்றனா்.

ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க