செய்திகள் :

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கடந்த 2022 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்று வருகின்றனா்.

தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் சென்னை தலைமை அலுவலகத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுநா்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பாக செயல்படும் நூலகத்தில் 1,200 க்கு மேற்பட்ட போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா தாள்கள் உள்ளன. ஒவ்வொரு சனிக்கிழமையும் முழு மாதிரி தோ்வு நடைபெறுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக செயல்படுகின்ற தன்னாா்வ பயிலும் வட்டத்தில் செயல்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் இதுவரை 810 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனா்.

இந்த நிலையில், இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு துறைகளில் பணியில் சோ்ந்துள்ள 9 போ் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வை சந்தித்தனா். அவா்களுக்கு ஆட்சியா் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். நியமன ஆணைகள் கிடைக்கப் பெற்றவா்கள் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅ... மேலும் பார்க்க

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவா... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலை... மேலும் பார்க்க