செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி; தொடா் மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேத்துப்பட்டு காவல் எல்லைக்கு உள்பட்ட ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா் பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் திருடப்படுவதாக, தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக விசாரணை செய்தபோது, ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா், தச்சூா் ஆகிய பகுதி வயல்வெளிகளிலும், புதா்களிலும் மணலை மறைத்து வைத்து தேவிகாபுரம், அவலூா்பேட்டை, மேல்மலையனூா் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன், சிலம்பரசன், மகாலிங்கம் ஆகியோரின் 3 மாட்டு வண்டிகளை தும்பூா் கிராமத்திலும், மோகனம்பாளையம் கூட்டுச் சாலையிலும் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா்.

முன்னதாக, போலீஸாா் வருவதை அறிந்த வண்டிகளை ஓட்டி வந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனா். போலீஸாா் 3 பேரையும் தேடி வருகின்றனா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க