செய்திகள் :

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

post image

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

”100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்களால் அனைத்து மத ரீதியிலான வழிபாடுகளும் சுதந்திரமாக செய்ய முடிகிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் 50 ஹிந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. உதாரணம் பாகிஸ்தானும் வங்கதேசமும்தான்.

உத்தரப் பிரதேசம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கலவரம் நடைபெற்றிருக்கிறது. ஹிந்து கடைகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டது. ஹிந்து வீடுகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டது. ஆனால், 2017-க்கு பிறகு கலவரம் நடைபெறவில்லை. ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நான் ஒரு சாதாரண உத்தரபிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு யோகி பதிலளித்ததாவது:

”ராம நவமி, ரமலான் போன்ற பண்டிகையின்போது நிர்வாகங்களுடன் கலந்துரையாடி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகையின்போது திரைகளால் மசூதிகள் மூடப்பட்டது. மசூதிக்கள் மீது வண்ணம் வீசக் கூடாது என்று கடுமையான வழிகாட்டு நெறிமுறை இருக்கிறது. வண்ணங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. முஹரம் பண்டிகையின்போது பேரணிகள் நடத்துகிறார்கள், அவர்களின் கொடியின் நிழல் கோயில் மீது விழுவதில்லையா? அந்த நிழல் ஹிந்துக்கள் வீட்டை அசுத்தமாக்குமா?” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேச... மேலும் பார்க்க

மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் விமானம் மூலமாக 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலி... மேலும் பார்க்க