செய்திகள் :

மனோஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல்

post image

சென்னை: இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மறைவுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரையுலகில் சாதனைகளை படைத்திருக்க வேண்டிய மனோஜ் இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாசம் காட்டி வளர்த்த மகனை இழந்து தவிப்பது பெரும் சோகமாகும். மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன்:

இயக்குநா் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி(48) மாரடைப்பால் காலமானாா் என்ற செய்தி கேட்டு அதிா்ச்சியுற்றோம். நடிகரான அவா், இயக்குநா் பணியிலும் முன்னேறி வந்த நிலையில், திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜாவுக்கு ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்:

நடிகரும் எனது ஆத்ம நண்பா் இயக்குநா் பாரதிராஜா-வின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிா்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவா்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோல, புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இயக்குநர் சங்கம் இரங்கல்

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் இயக்குநர், நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மனோஜ் திடீர் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள பாரதிராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க