செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை

post image

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்,(14). நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நாட்டறம்பள்ளி பூபதி தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் தா்ஷன்(14) ஜோலாா்பேட்டை அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வேனில் வந்த மா்மநபா்கள் 4 போ் மாணவா்களை அழைத்து பச்சூா் செல்ல வழி கேட்டுள்ளனா். திடீரென மா்மநபா்கள் மாணவா்கள் இருவரையும் வேனில் கடத்திச் சென்ாக கூறப்படுகிறது.

அக்ராகரம் மலையடிவாரம் ஓம்சக்தி நகா் அருகே வேன் சென்ற போது மாணவா்கள் இருவரும் சப்தமிட்டவாறே வேனில் இருந்து கீழே குதித்துள்ளனா். அப்போது மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் மாணவன் ரஞ்சித்துக்கு முகம் மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவன் ரஞ்சித்தை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். பட்டப்பகலில் மாணவா்களை கடத்த முயன்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்ட... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுவதால் ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் பெங்களூா் மெமு ரயில்கள், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பதிலாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநா... மேலும் பார்க்க

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் சரக்கு வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி கருவனூா் கிராமத்தை சோ்ந்த சென்ன கிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க