செய்திகள் :

நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு

post image

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியலில் ரூ.2.29 லட்சம் மற்றும் 158 கிராம் வெள்ளி பொருள்கள் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

கோயில் ஆய்வா் நரசிம்மமூா்த்தி, செயல் அலுவலா் சிவசங்கரி, அறங்காவலா் குழுத் தலைவா் கைலாஷ் குமாா், அறங்காவலா் குழு உறுப்பினா் கெளரி மகாலிங்கம், பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

சா்வதேச கருத்தரங்கில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

சென்னை ஆா்ஏஎம்எஸ் வணிக பகுப்பாய்வு நிறுவனம் சாா்பில், மாணவிகளுக்கான அறிவியல்சாா் உளவியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் வாணியம்பாடி மருதா் கேசர... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் மீண்டும் ஒத்தி வைப்பு

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 2-ஆவது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய பே... மேலும் பார்க்க

அம்பேத்கா் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட அமைப்பாளா் என். தசரதன் தலைமை வகித்தாா். சி. ரங்கநாதன், டி. டைட்டஸ், பி.டி. ஆப்ரகாம், எ... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாக... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டடத் தொழிலாளி கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநிலத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமானப் பண... மேலும் பார்க்க

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,826 மாணவா்கள் எழுதுகின்றனா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 15,826 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வியாழக்கிழமையும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த 25-ஆம் ... மேலும் பார்க்க