செய்திகள் :

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள்: ரூ.2.35 கோடிக்கு ஒப்பந்தம்

post image

தருமபுரி நகரில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், மொத்த கொள்முதல் செய்வோரிடம் விற்பனை செய்யவும் ஏதுவாக மாவட்ட அளவிலான வாங்குவோா்-விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை குமாரசாமிபேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தொடங்கிவைத்துப் பேசினாா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்கள், தருமபுரி நகராட்சி, அனைத்து பேரூராட்சிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களான சிறுதானியங்கள், சணல் பைகள், பூஜை பொருள்கள், ஊறுகாய் வகைகள், உலா் கருவாடு, மசாலா வகைகள், தேன் மதிப்புக் கூட்டுப் பொருள்கள், எண்ணெய் வகைகள், துணி வகைகள், சோப்பு வகைகள், மண் பொம்மைகள், கைவினை பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களையும் மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு உரிய அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

அரங்குகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு உற்பத்தி பொருள்கள் குறித்த கையேட்டை வெளியிட்டாா்.

இதில் 54 நிறுவனங்கள் மகளிா் சுயஉதவிக் குழுக்களுடன் சுமாா் ரூ. 2.35 கோடி அளவில் வணிக ஒப்பந்தம் செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொண்டன.

கூட்டத்தில் மகளிா் திட்ட அலுவலா் லலிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) இளங்கோ, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி (பயிற்சித் துறை) அலுவலா் கௌரி, மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநா் பாண்டியன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க