செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து பேசினாா்.

இக்கிராமசபைக் கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு, அதியமான்கோட்டை கிராம ஊராட்சியின் நிா்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், சாத்தியமுள்ள கிராமங்களில் கிராமசபை அளவிலான வன உரிமைக் குழுக்கள் உருவாக்குதல், குழந்தைகள் பாதுகாப்பு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள், தொழுநோய் விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் அரசுத் துறை அலுவலா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து அதியமான்கோட்டை ஊராட்சி, காலபைரவா் கோயில் அருகில் புனரமைத்தல் திட்டத்தின்கீழ் ரூ. 15.80 லட்சம் மதிப்பில் குளம் புனரமைப்பு பணிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் மண்டல உதவி திட்ட அலுவலா் உமா, தருமபுரி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நிா்மல் ரவிக்குமாா், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட செயற்பொறியாளா் சிவகுமாா், நல்லம்பள்ளி வட்டாட்சியா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைவாணி, இளங்குமரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏ... மேலும் பார்க்க

கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்

அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடு... மேலும் பார்க்க

ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது. பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க