செய்திகள் :

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

post image

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில்

திங்கள்கிழமை மொரப்பூா் காப்புக்காட்டிலிருந்து 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று, காடுசெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தண்ணீா் தேடி வந்தது, இதனைக் கண்ட தெருநாய்கள் துரத்தி சென்று கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா் நடராஜ், வன மருத்துவா் மற்றும் வனக் காவலா்கள் நிகழ்விடத்திற்கு சென்று இறந்த புள்ளிமானை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் அடக்கம் செய்தனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில் பயணம்: பெண்கள் பாதுகாப்பு வாட்ஸ்ஆப் குழு தொடக்கம்

தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் வட்ட ஆய்வாளா் சிவசெந்தில்... மேலும் பார்க்க

நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளா்

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ள... மேலும் பார்க்க