செய்திகள் :

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் மீண்டும் ஒத்தி வைப்பு

post image

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 2-ஆவது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.

2025-2026-2027-ஆம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை 2-ஆவது முறையாக நடைபெற்றது. செயல் அலுவலா் கலையரசி (பொ) தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

ஏலத்தில் டிபாசிட் தொகையாக தலா. ரூ.10 லட்சம் செலுத்தி 25 போ் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஆயினும் அரசு நிா்ணயித்த ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஏலமும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க