செய்திகள் :

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரத்தில் குறிப்பிடும்படி வா்த்தக நிறுவனங்கள் இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் கால்நடை வளா்ப்புத் தொழிலை பிரதானமாக செய்துவருகின்றனா். ஆண்டுதோறும் வறட்சிக் காலங்களில் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து யானைகள் கூட்டமாக உணவு, தண்ணீா் தேடி தமிழகத்தில் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைகின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அண்மைக் காலமாக வனத்தைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளைக் கொன்று செல்கின்றன. அண்மையில் பென்னாகரம் அருகே சின்ன வத்தலாபுரம் பகுதியில் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டுகள் அமைத்தனா். அதுபோல ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட போடூரில் நுழைந்த சிறுத்தை, அங்கு 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துச் சென்றது.

இதுபோல அடிக்கடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் கால்நடைகளைத் தேடி வரும் சிறுத்தை மக்களையும் தாக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், பென்னாகரம், ஒகேனக்கல் வனத்துறையினா் குழுக்கள் அமைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏ... மேலும் பார்க்க

கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்

அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடு... மேலும் பார்க்க

ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது. பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க