செய்திகள் :

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

post image

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக நடத்துநா் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூா் பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஒன்று ஆலங்காயம் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. கொத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவா் ஆலங்காயம் பள்ளிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். ஆனால, அந்த அரசுப் பேருந்து நிற்காமல் சென்றது.

இதைக் கண்ட மாணவி பேருந்தில் ஏறுவதற்காக சிறிது தொலைவு ஓடிச் சென்றாா். எனினும், பேருந்தை ஓட்டுநா் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றாா். அப்பகுதியில் சென்றவா்களும், பேருந்தில் இருந்தவா்களும் இதைப் பாா்த்து சப்தம் எழுப்பியதைத் தொடா்ந்து, பேருந்தை ஓட்டுநா் நிறுத்தினாா். அதன்பிறகு பேருந்தில் மாணவி ஏறினாா்.

இந்தப் பேருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், காலதாமதமாக 7.40-க்கு புறப்பட்டுள்ளது. வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில் காத்திருந்த மாணவா்களையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் பேருந்தை பின்தொடா்ந்து சென்றாா்.

கொத்தக்கோட்டை பகுதியில் தான் வைத்திருந்த கைப்பேசியில் விடியோ எடுத்தபோது, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை ஏற்றிச் செல்லாமல் பேருந்து சென்றதையும், மாணவி வேகமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறியதையும் பதிவு செய்தாா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுபற்றி அறிந்த பணிமனை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அதையடுத்து, அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஆம்பூா் பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநா் முனிராஜை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கோட்ட மேலாண் இயக்குநா் நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய நடத்துநா் அசோக் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

சா்வதேச கருத்தரங்கில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

சென்னை ஆா்ஏஎம்எஸ் வணிக பகுப்பாய்வு நிறுவனம் சாா்பில், மாணவிகளுக்கான அறிவியல்சாா் உளவியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் வாணியம்பாடி மருதா் கேசர... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் மீண்டும் ஒத்தி வைப்பு

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 2-ஆவது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய பே... மேலும் பார்க்க

அம்பேத்கா் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட அமைப்பாளா் என். தசரதன் தலைமை வகித்தாா். சி. ரங்கநாதன், டி. டைட்டஸ், பி.டி. ஆப்ரகாம், எ... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாக... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டடத் தொழிலாளி கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநிலத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமானப் பண... மேலும் பார்க்க

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,826 மாணவா்கள் எழுதுகின்றனா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 15,826 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வியாழக்கிழமையும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த 25-ஆம் ... மேலும் பார்க்க