செய்திகள் :

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

post image

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசுப் பேருந்து, கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது.

கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ் 2 மாணவி பேருந்தில் ஏறுவதற்காக நீண்ட தொலைவுக்கு வேகமாக ஓடியுள்ளார். பிறகு பேருந்தை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவி ஏறினார்.

பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மாணவியை ஏற்றாமல் நீண்ட தொலைவு பின்னால் ஓடிவந்த பிறகு ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜை இடைநீக்கம் செய்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்ட... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சி... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுவதால் ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் பெங்களூா் மெமு ரயில்கள், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பதிலாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநா... மேலும் பார்க்க

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் சரக்கு வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி கருவனூா் கிராமத்தை சோ்ந்த சென்ன கிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள்... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க