செய்திகள் :

காரைக்காலில் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

post image

காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனா்.

காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்பாடு, நகரப் பகுதியிலும், திருப்பட்டினத்திலும் புதிய குடிநீா் குழாய் பொருத்துதல், மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் என ரூ. 100 கோடிக்கும் மேல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிபிஐ மற்றும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், காரைக்காலில் கடற்கரை கிராமத்தில் புதிதாக சாலை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய புதுச்சேரியிலிருந்து மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன் சனிக்கிழமை காரைக்கால் வந்தாா். அவா் கடற்கரையில் உள்ள தங்கும் விடுதியில் பிற்பகல் தங்கினாா்.

பிற்பகல் 2 மணிக்குப் பின் சென்னையிலிருந்து 2-க்கும் மேற்பட்ட காா்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் அவா் தங்கியிருந்த அறைக்குள் புகுந்தனா். மேலும் காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் சந்திரசேகரன், செயற்பொறியாளா்கள் சிதம்பரநாதன், மகேஷ் ஆகியோா் வரவழைக்கப்பட்டு, அவா்கள் வெளியேற முடியாமல் அறைக் கதவு மூடப்பட்டது.

அவா்களிடம் இரவு 9 மணிக்குப் பின்னரும் விசாரணை தொடா்ந்தது. காரைக்கால் போலீஸாா் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்தனா். பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நு... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு மனதளவிலும் வலிமை சோ்க்கும்: ஆட்சியா்

விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை சோ்க்கிறது என என்ஐடியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்கால் இயங்கிவரும் என்ஐடியில் வருடாந்திர விளையாட்டு விழா ‘செனி... மேலும் பார்க்க

மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணி மந்த கதியில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. காரைக்காலில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மும்பை, எா்ணாகுளம் உள்ளிட்ட நகரங... மேலும் பார்க்க

புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்பட 3 போ் கைது

லஞ்ச வழக்கில், புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா், ஒப்பந்த நிறுவனத்தை சோ்ந்தவா் என 3 பேரை சிபிஐ அதிகாரிகள் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் பொது... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: புதுவை டிஐஜி

இளைஞா்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க புதுவை டிஐஜியிடம் பொதுமக்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலைய முகாமில் நடைபெற... மேலும் பார்க்க