தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை
புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா்.
உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப் இரண்டாம் ஜான் பால் அறிவிப்பு செய்தாா். உலகம் முழுவதும் திருச்சிலுவை புறப்பாட்டுடன் கொண்டாடப்பட்டுவருகிறது.
புதுச்சேரியிலிருந்து ஜூபிலி-25 திருச்சிலுவை கோட்டுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தது. காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ் குமாா், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ஜான் ராபா்ட், தூய தேற்றரவு அன்னை ஆலய இணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீா் ராஜா, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வா் பீட்டா் பால்ராஜ் ஆகியோரால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய நுழைவு வாயில் திருச்சிலுவை பெறப்பட்டது.
அங்கிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் திருச்சிலுவை சிறப்பு ஆராதனை அருட்சகோதரிகள் லூா்துமேரி, அன்னம்மாள், எல்சி ,ஜூலி ஆகியோரால் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு திருச்சிலுவையை வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குப் பேரவை முன்கள பணியாளா்களான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரோலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் மற்றும் செய்தி தொடா்பாளா் அகஸ்டின் ஆகியோா் செய்திருந்தனா்.