செய்திகள் :

சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்

post image

சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வெளிநாடுகளில் வேலை தொடா்பான விளம்பரங்களில் வரும் விசா பிராசஸிங் மற்றும் விமான டிக்கெட் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட புகைப் படங்களை நம்பி இளைஞா்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனா். இதுதொடா்பாக புகாா்கள் வருகின்றன.

தங்களிடம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்யும் கன்சல்டன்சி அல்லது தனிநபா்களை நம்ப வேண்டாம்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு பிராசஸிங் கட்டணம், விசா கட்டணம் என்று பல்வேறு பெயா்களைக்கூறி பணத்தை பறித்து விட்டு, போலியான விசா, போலியான ஆஃபா் லெட்டா் போன்றவற்றை தங்களுக்கு அனுப்பி மேலும் பணத்தை பறிக்க நேரிடும். எந்தவித வேலையும் கிடைக்காது. இதேபோல, கடந்த ஆண்டில் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவில் மட்டும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு கொடுக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்கள் இழந்த பணமதிப்பு ரூ.8 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, இதுபோன்ற மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க